இராக் எதிரொலி: நேபாளத்தில் மசூதி எரிப்பு
காத்மாண்டு:
இராக்கில் தீவிரவாதிகளால் 12 நேபாள தொழிலாளர்கள் கொலை செய்ததையடுத்து நேபாளத்தில்பெரும் வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் ஜுமா மசூதி தீ வைத்துஎரிக்கப்பட்டது. மேலும் கத்தார் ஏர்லைன்ஸ் அலுவலம், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குஆட்களை அனுப்பும் தனியார் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் ஆகியவையும்சூறையாடப்பட்டன.
எரிக்கப்பட்ட இந்த மசூதி தான் நேபாளத்திலேயே மிகப் பெரிய பள்ளிவாசலாகும். இதையடுத்துமதக் கலவரம் நேராமல் தடுக்க, காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் இரங்கல் அனுஷ்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த 12 வாலிபர்கள் ஜோர்டனைச் சேர்ந்த மார்னிங் ஸ்டார் என்ற நிறுவனத்துக்காகஇராக்கில் பணியாற்றச் சென்றனர்.
ஆகஸ்ட் 19ம் தேதி இரு கார்களில் ஜோர்டனில் இருந்து இராக்குக்குள் நுழைந்த இவர்களைஅன்சர்-அல் சுன்னா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
5 நாட்களுக்கு முன் இவர்களது வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள், நேபாள நாட்டினர்இராக்க்குக்கு வருவதை நேபாள் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே இது போன்ற தடையை நேபாள் விதித்துள்ளது.
இந் நிலையில் அந்த 12 தொழிலாளர்களும் கொல்லப்பட்ட வீடியோவை தீவிரவாதிகள் நேற்றுவெளியிட்டனர்.
ஒருவரை தலையை வெட்டியும் மற்றவர்களையும் சுட்டும் கொன்றுள்ளனர் (முன்னதாக அனைவரும்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன).
அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், கொல்லப்பட்டு கிடப்பதையும் காட்டும் வீடியோவைதங்களது இணையத் தளத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து நேபாளத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் சாலைகளில்திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காத்மாண்டுவில் ஒரு பள்ளிவாசல்சூறையாடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதலும் நடந்து வருகிறது.