For Daily Alerts
Just In
கும்பகோணம்: கைதானவர்களுக்கு காவல் நீட்டிப்பு
கும்பகோணம்:
கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரின் காவலை கும்பகோணம் நீதிமன்றம்நீட்டித்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட18 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களில் கல்வித்துறை அதிகாரிகள் சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ், பாலசுப்ரமணியன், முத்துபழனிச்சாமி, பழனிச்சாமி, நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பாலாஜி, மாதவன், தாசில்தார்பரமசிவம், பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகிய 13 பேருக்கும் காவல் நீட்டிக்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கும்பகோணம்மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், 15ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, September 2, 2004, 5:30 [IST]