For Daily Alerts
Just In
பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி 2 பேர் பலி
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு 2 ஊழியர்கள் பரிதாபமாகதீயில் கருகி இறந்தனர்.
வாடியூரில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இந்த விபத்து நடந்தது. பயங்கர இடி, மின்னலுடன் இப் பகுதியில்பலத்த மழை பெய்தது.
இதையடுத்து தொழிற்சாலையை மூடிவிட்டு ஊழியர்கள் வீடுகளுக்குக் கிளம்ப ஆயத்தமாயினர். இந் நிலையில்மருந்துப் பொருட்கள் கலப்பு அறையின் கதவை மூடுவதற்காக தங்கபாண்டியன், பொன்னுச்சாமி ஆகியோர்உள்ளே சென்றனர்.
அப்போது பட்டாசுத் தொழிற்சாலையை மின்னல் தாக்கியது. இதில் பட்டாசுகள் இருந்த இடத்தில் தீப்பிடித்துக்கொண்டது. பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.
இதில் தங்கபாண்டியனும் பொன்னுச்சாமியும் சிக்கி உடல் கருகி இறந்தனர். மேலும் 10 ஊழியர்கள்காயமடைந்தனர்.
Comments
Story first published: Saturday, September 4, 2004, 5:30 [IST]