2 வருடமாக முதலிரவை ஒத்திவைத்தவர் கைது
சென்னை:
கேட்ட வரதட்சணை கிடைக்காததால், கல்யாணமாகி 2 வருடமாகியும் முதலிரவை நடத்த தடை விதித்த கணவர் மீதுமனைவி போலீஸில் புகார் கொடுத்தார். கொடுமைக்கார கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும், கோபிநாத் என்ற பொறியாளருக்கும்இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந் நிலையில், ஸ்ரீதேவி தற்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்கல்யாணமானது முதல் வரதட்சணை கேட்டு தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். இதுவரை முதலிரவு கூடநடக்கவில்லை என்று கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோபிநாத்தைத் தேடி போலீஸார் விரைந்தனர். கனடா நாட்டுக்குச்செல்லத் திட்டமிட்டிருந்த கோபிநாத்தை போலீஸார் கைது செய்து தற்போது "மாமியார்" வீட்டுக்குஅனுப்பியுள்ளனர். அவருடைய தந்தை மாசிலாமணியும் கைது செய்யப்பட்டார்.