For Daily Alerts
Just In
தியாகிகளுக்கு குமரி அனந்தனின் வேண்டுகோள்
சென்னை:
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாத தியாகிகள், தங்களைப் பற்றிய தகவல்களைசென்னையில் உள்ள காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தப் பேரவையின் தலைவர் குமரி அனந்தன்கோரிக்கை விடுத்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன், காந்தி பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தியாகிகள்தொடர்பாக குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாமல் போய் விட்ட உண்மையான தியாகிகள் குறித்ததகவல்களை தொகுத்து வெளியிடவுள்ளோம்.
எனவே, தியாகிகள், அவர்களது வாரிசுகள், தியாகிகள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தோர்கள், தியாகிகளின்வரலாறுகளை, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரத்துடன் காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு குமரிஅனந்தன் கோரியுள்ளார்.
Comments
Story first published: Monday, September 6, 2004, 5:30 [IST]