இலங்கையில் 3 விடுதலை புலிகள் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் படை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3புலிகள் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலை இலங்கை ராணுவம்தான் நடத்தியுள்ளது என்று புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் உள்ள புலிகளின் படை முகாம் மீது 30 பேர் கொண்டஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் புலிகள் இயக்கத்தைசேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான தீவிரவாதிகள் (கருணா கும்பல்) சிலரின் ஒத்துழைப்போடு இலங்கை ராணுவகமாண்டோக்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் இருவருக்குக் காயம்ஏற்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவத் தளபதி சாந்தா கொட்டேகோடா மறுத்துள்ளார்.அவர் கூறுகையில், இந்தத் தாக்குதலில் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம்இருந்தால் அதை புலிகள் வெளியிட வேண்டும் என்றார்.
இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து ஆலோசனைநடத்த நார்வே தூதர் அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்.