மும்பை தமிழ் மாணவர்களுக்கு இலவச நூல்: ஜெ
சென்னை:
மும்பையில் தமிழ் மொழிப் பாடங்களைப் படித்து வரும் சுமார் 46,320 மாணவ, மாணவியருக்கு இலவசமாகதமிழ்ப் பாட நூல்களை அனுப்பி வைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் 72 மாநகராட்சிப் பள்ளிகளில் சுமார் 40,320 மாணவ, மாணவியர் தமிழ்ப் பாடம் படித்துவருகிறார்கள். இதேபோல, தனியார் பள்ளிகளில் சுமார் 6,000 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தைப் படித்துவருகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தின்படி படித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் வசதி, வாய்ப்பில்லாதவர்கள் என்பதால் இவர்களுக்குரிய தமிழ்ப் பாட நூல்களைஇலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த பல்வேறு தமிழ்அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள தமிழ்ப் பாட புத்தகங்களை மும்பைமாணவ, மாணவியருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.