சேது சமுத்திர திட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிகூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேது சமுத்திர திட்டம் சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரத்திற்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள 23 சிறிய தீவுகளில் பவளப் பாறைகள் ஏராளமாக உள்ளன.இந்த பவளப்பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் உதவுபவை.
சேது சமுத்திரத் திட்டத்தின் பூர்வாங்கப் பணியான கடலை தூர்வாரி ஆழப்படுத்தும்போது இந்த பவளப் பாறைகள்அழித்துவிடும். இதனால் ராமேஸ்வரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 5 லட்சம் மீனவர்களின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிடும்.
இத் திட்டத்தால் உண்டாகும் பாதிப்பு குறித்து கூறுபவர்களை எதிப்பாளர்கள் என்று கருதாமல், அவர்கள்கருத்திலும் நியாயம் இருக்கக் கூடும் எனக் கருதி நிதானமானப் போக்கை கையாண்டு நாட்டுக்கு நல்லது பயக்கும்முடிவை மத்திய கப்பல்துறை அமைச்சகம் எடுக்கும் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
திட்டக் கமிஷன் நிதி ஒதுக்கீடு:
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய திட்டக் கமிஷன் கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டத்திற்கு மேலும் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.2,000 கோடி செலவிலான இத் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது திட்டக் கமிஷன் கூட்டத்தில் மேலும் ரூ.40 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது.