For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபால்: அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது போடப்பட்டுள்ள பொடா வழக்குத் தொடர்பான சிலஆவணங்களை அவரிடம் காட்டக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது தொடர்பாக விளக்கம்கேட்டுள்ளது பொடா மறு ஆய்வுக் குழு.

அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், தமிழர் விடுதலைப் படையின் நோட்டீஸ்வைத்திருந்ததாகவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார் கோபால்.நீண்ட சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

அவர் கைது செய்யப்பட்டது சரியா என்பது தொடர்பான விசாரணை பொடா மறு ஆய்வுக்குழுவின் முன் நடந்து வருகிறது. அவர் மீதான வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும்தங்களிடம் தாக்கல் செய்யுமாறு கடந்த வாரம் மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில ஆவணங்கள் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை கோபால் தரப்பிடம் காட்டக் கூடாது என்றுகூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று மறு ஆய்வுக் குழு மீண்டும் தனது விசாரணையை ஆரம்பித்தது. அப்போதுபேசிய குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா,

விசாரணையின்போது கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றை ஏன் கோபாலிடம் காட்டக்கூடாது என்பதற்கு தமிழக அரசு உரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.

கோபாலிடம் காட்டக் கூடாது என்று நீங்கள் சொல்லும் ஆவணங்களில் கோபாலே கொடுத்தவாக்குமூலமும் அடங்கும். அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கூட அவரிடம் காட்டக் கூடாது என்றுசொல்வது ஏன்?

தன் மீது ஏன் பொடா வழக்குப் போடப்பட்டது என்பதை அறிய குற்றம்சாட்டப்பட்டவருக்கு முழுஉரிமை உண்டு. இதனால், இந்த ஆவணங்களைப் பார்க்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.

அவரிடம் காட்டக் கூடாது என்று சொல்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் மாத்தூர், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணைத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டியதில்லைஎன்றார்.

ஆனால், வழக்கை சந்திப்பவருக்கு அவருக்கு எதிரான அடிப்படையான ஆவணங்களைக் கூடகாட்டக் கூடாது என்று சொல்லும் தமிழக அரசு அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்றுசகார்யா கூறினார்.

இதையடுத்து அதிகாரிகளுடன் கலந்து பேச அவகாசம் கேட்டார் மாத்தூர். இதைத் தொடர்ந்துவிசாரணையை நாளைக்கு சகார்யா ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X