வைகோ மீதான பொடா விசாரணைக்கு மீண்டும் தடை
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்துக்குவிதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை நீட்டித்துள்ளது.
பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு மறு ஆய்வுக் குழு செய்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்க மறுத்ததையடுத்துவைகோவின் சார்பில் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அத்தோடு,வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், அதில் போதிய காரணங்கள் கூறப்படவில்லை என்று கூறி வழக்கை வாபஸ் பெறபூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அனுமதி தர மறுத்துவிட்டார்.
இந் நிலையில் வைகோ முன்பு தமிழக அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்த மனு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வரியவா, சேமா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லிநீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கிறோம்.
தன் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்த பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வைகோவும் 8மதிமுகவினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்தனர்.