பொடாவுக்கு இணையான சட்டம்: பாஜக திட்டம்
டெல்லி:
பொடா சட்டத்தை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளதால், பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில்பொடாவுக்கு இணையாக ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர அக் கட்சி முடிவுசெய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மாநில முதல்வர்களின் கூட்டம்நடந்தது. அதில், குஜராத் முதல் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப்பிரதேச முதல்வர் கெளர், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் மற்றும் ஜார்க்கண்ட், கோவா ஆகிய 6 மாநிலமுதல்வர்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் பொடா சட்டம் நீக்கப்படுமானால், அதற்கு இணையான புதிய சட்டம் உடனடியாகபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமலாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
உமா யாத்திரை: மகாஜன் புறக்கணிப்பு
இதற்கிடையே மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி நடத்தி வரும் மூவர்ணக் கொடியாத்திரைக்கு அக் கட்சியிலேயே போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பியின் ஆதரவுடன் கட்சியின் தலைவர் பதவியைப் பிடிக்க உமா பாரதிமுயல்வதாக வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கருதுகின்றனர். மேலும் பிரமோத் மகாஜன் போன்றதலைவர்கள் உமாவின் வளர்ச்சியை விரும்பவில்லை என்று தெரிகிறது.
நேற்று மகராஷ்டிரம் வந்த உமா பாரதியின் யாத்திரையை வரவேற்க முக்கியத் தலைவர்கள் யாரும்வரவில்லை. மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. பொறுப்பாளரான பிரமோத் மகாஜன் இந்த நிகழ்ச்சியைப்புறக்கணித்துவிட்டார். மேலும் இரண்டாம் மட்டத் தலைவர்களையும் இந் நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
இது குறித்து உமாவிடம் கேட்டபோது, எனது யாத்திரை செல்லும் வழியில் முக்கியத் தலைவர்கள்எல்லோரும் வர வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை என்றார்.