For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபால்: அரசின் மேல் முறையீடும் தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா வழக்கு ஆவணங்களை நக்கீரன் கோபாலுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வழங்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள கோபாலுக்கு, அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பொடா மறு ஆய்வுக் குழு நீதிபதி சஹார்யாஉத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி சொக்கலிங்கம் அதை நேற்று காலை தள்ளுபடி செய்தார்.

இத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு சென்னை மேல் முறையீடு செய்தது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

ஆவணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட பொடா மறு ஆய்வுக் குழுக்கு அதிகாரம் உள்ளது. தமிழகஅரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டால் அது சட்ட விதிமுறைகளை மீறுவதாகி விடும். வழக்கு விசாரணையின்போது தங்கள் தரப்பு வாதங்களை வலுவாக வைக்க, கோபால் தரப்பினருக்கு ஆவணங்கள் வழங்கப்படவேண்டியது அவசியம்.

ஏன் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பொடா மறு ஆய்வுக் குழுதெரிவிக்கவில்லை என்பதை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் தற்போதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

குற்றப்பத்திரிக்கை இல்லாமல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய முடியாது. எனவே, கோபால் மீதான வழக்குக்குஅடிப்படையே இல்லை என்று மறு ஆய்வுக் குழு முடிவெடுத்தால் அந்த முடிவும் மாநில அரசை கட்டுப்படுத்தும்.எனவே பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவுப்படி, கோபால், காமராஜ், ராமநாதன் ஆகியோருக்கு 15ம்தேதி (இன்று) பிற்பகல் இரண்டு மணிக்குள் ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X