ஆயுத தயாரிப்பு: இந்தியா- இங்கிலாந்து ஒப்பந்தம்
லண்டன்:
பாதுகாப்பு, அணு ஆராய்ச்சி, உயர் தொழில்நுட்ப வர்த்தகம் ஆகிய துறைகளில் கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும்இங்கிலாந்தும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளில் இரு நாடுகளும்ஒருவருக்கொருவர் முழு ஒத்துழைப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா செல்லும் வழியில் லண்டன் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும் இந்த ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்கள் தயாரிப்பில் இறங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள்கடத்தல் தடுப்பு, சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இணைந்துசெயலாற்றவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
டோனி பிளேருடன் சர்வேதச விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ள சிங் பின்னர் அமெரிக்கா கிளம்புகிறார்.
ரஷ்யா, சீனா, ஜப்பான் தவிர இந்தியாவுடனும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இங்கிலாந்து தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபர் புஷ்ஷை சந்திக்கும் மன்மோகன் சிங் பின்னர் ஐநா சபையில் உரையாற்றுகிறார். அக் கூட்டம் முடிந்த பின்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபையும் சந்திக்கிறார்.