பொடா ரத்து தவறான முடிவு: ஜெ.
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது தவறான முடிவாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தீவிரவாதம் குறித்த தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசியதாவது:
பொடா சட்டம் ரத்தானதால், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளின் வலிமை குன்றியுள்ளது.இதனால் நாட்டின் பாதுகாப்பில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பலம் பொருந்திய சட்டம் எதுவும் தற்போது இல்லை. ஏற்கனவே இருக்கும்சட்டங்கள் கடுமையான குற்றங்களை ஒடுக்கப் போதுமானவையாக இல்லை. எனவே பொடா போன்ற சட்டங்கள்நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயம் தேவை. இப்போது அச் சட்டம் திரும்பப் பெறப்பட்டிருப்பது நாட்டின்பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்துள்ளது.
பொடா சட்டத்தில் உள்ள ஷரத்துகள் மற்ற சட்டங்களில் சேர்க்கப்படும் என்று கூறவது போதிய நம்பிக்கையைஅளிக்கவில்லை.
தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்க காவல்துறைநவீனப்படுத்தப்பட வேண்டும். மாநில காவல்துறைக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையேபோதுமான ஒத்துழைப்பு இல்லை.
இதைத் தவிர்க்க, மாநில காவல்துறை, மத்திய புலனாய்வுத் துறை, சுங்கத்துறை, கடலோரப் பாதுகாப்பு படைஆகியவற்றை கணிப்பொறி மூலம் இணைக்க வேண்டும்.
நாட்டின் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளின்ஊடுறுவலுக்கு வழி வகுக்கும் என்பதாலும்தான் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேயான கப்பல்போக்குவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என்று கூறினார்.