For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது: குடும்பங்களுக்கு ஜெ. உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உத்தராஞ்சல் மாநிலத்தில் மலையிலிருந்து பஸ் உருண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 பேர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலும்,நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 120 பேர் பத்ரிநாத் புனித யாத்திரைசென்றனர். டெல்லி வழியாக அவர்கள் பஸ்சில் பத்ரிநாத் சென்றபோது, உத்தராஞ்சல் மாநலம் சமோலி மாவட்டத்தில் மலைப் பாதையில்பயணித்தபோது, பஸ் 200 அடிப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 13 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

மேலும் இருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியாயினர்.

பலியானோர் விவரம்:

ராமமூர்த்தி (75), சீதாராம் (71), ராஜன் (54), ராஜா (49), டி.எஸ்.ராவ் (58), சியாமளா (65), சுந்தர மகாதேவன் (64), சுந்த ராமன் (63),பாலுசந்த் (52), காமாட்சி (50), லட்சுமி (57), சுந்தர்ராஜன், விசாலாட்சி, சுந்தரம் அய்யர் (62), சரஞ்சித் சிங் (பஸ் டிரைவர்).

இந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000, லேசானகாயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் உடல்கள் டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X