மாணவியை கற்பழிக்க முயன்ற தலைமை ஆசிரியர்
சேலம்:
சேலத்தில் பள்ளி மானபங்கப்படுத்த முயற்சித்த தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மிட்டாபுதூர் அருகே அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக மாதேஷ் என்பவர்பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றசிறுமியை மாதேஷ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிடவே, மாதேஷ் அவளைவிடுவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சித்ரா தனது பெற்றோரிடம் கூறினாள். இதனையடுத்து மாதேஷ் குறித்து பெற்றோர்கள்மற்றும் ஊர் மக்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகத்திடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோருடன் தொடக்கக்கல்வி அதிகாரி வசந்தாவிசாரணை நடத்தினார்.
விசாரணையில் மாதேஷ் மீதான செக்ஸ் புகார் உறுதி செய்யப்பட்டதால், மாதேஷ் இடமாற்றம் செய்யப்பட்டார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.