For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2,108 காவலர் பதவிக்கு குவிந்த 27,000 பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் 2,108 பெண் காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தேர்வு தமிழகத்தில்மொத்தம் 14 மையங்களில் இன்று முதல் தொடங்கியது. இதில் பி.இ. படித்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானபெண்கள் பங்கேற்றனர்.

முதல் நாளான இன்று சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் சரி பார்த்தல், 400 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகியவைநடந்தன. பல பெண்கள் பாவாடை- தாவணி, சேலையில் வந்திருந்தால் ஓட முடியாமல் தடுமாறினர்.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த இந்தத் தேர்வின்போது ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

திருமணமானவர்கள், திருமணமாகாதோர், பட்டதாரிப் பெண்கள் என பல தரப்பினரும் ஆயிரக்கணக்கில்வந்திருந்தனர். அதே போல மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 14 இடங்களில்நடந்த தேர்வில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருந்தனர்.

மொத்தமுள்ள 2,108 பெண் காவலர் பதவிகளில சேர மொத்தம் 27,000 பெண்கள் விண்ணிப்பித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகஅளவில் தேர்வுக்கு வந்திருந்தனர். நாளை குண்டு எறிதல் உள்ளிட்ட சில போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் சங்கத்தலைவரான டிஜிபி அலெக்சாண்டர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X