புதுவையில் அதிமுக பந்த்; 1,000 பேர் கைது
பாண்டிச்சேரி:
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி அதிமுக விடுத்திருந்த வேலைநிறுத்தஅழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புதுவை முழுவதும் பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டன.ஊர்வலம் நடத்த முயன்ற அதிமுகவினர் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நீண்ட காலமாக நடைபெறவில்லை. இந் நிலையில்உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி புதுவை மாநிலத்தில் முழு அடைப்பு நடத்த அதிமுக அழைப்புவிடுத்திருந்தது.
இதனையடுத்து நேற்று முழு அடைப்பு தொடங்கியது. காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.பஸ்கள் எதுவும் ஓடவில்லை. நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. காரைக்காலிலும் இதே நிலைதான்.
கடைகளை அடைக்க சில இடங்களில் வியாபாரிகள் மறுத்ததால் அங்கு அதிமுகவினர் கூடி கடைகளைஅடைக்குமாறு வற்புறுத்தியதால் லேசான பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் வந்து அதிமுகவினரை கலைந்து போகச்செய்தனர்.
இந் நிலையில், கடற்கரைப் பகுதியில் ஊர்வலம் செல்ல மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில்அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கூடினர். ஆனால் போலீஸார் ஊர்வலம் நடத்த அனுமதிஇல்லை என்று கூறி அவர்களைத் தடுத்தனர்.
போலீஸாரின் தடையை மீறி அதிமுகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றதால் அவர்கள் அனைவரையும் போலீஸார்கைது செய்தனர். 1,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாநிலம் முழுவதும் கைதாகியுள்ளதாக போலீஸார்தெரிவித்தனர்.