சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: வைகோ ஆதரவு
சென்னை:
சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திநிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் நல்லகண்ணு ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்திய தேசிய லீக் சார்பில் சென்னை மண்ணடியில் நடைபெற்ற காயிதே மில்லத், அப்துல் லத்தீப் ஆகியோரதுபிறந்தநாள் விழா நடைபெற்றது.
அதில் வைகோ, நல்லகண்ணு, திமுக அமைப்புச் செயலர் விடுதலை விரும்பி, விடுதலைச் சிறுத்தைகள்பொதுச்செயலர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண், தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர்அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் பேசுகையில், மதவாத சக்தியான பாஜகதோற்கடிக்கப்பட்டதோடு நமது கடமை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. சிறுபான்மை மக்களும் ஆட்சிஅதிகாரத்தில் பங்கேற்பவர்களாக மாற வேண்டும். அதற்கு மதசார்பில்லாத சக்திகள் உதவ வேண்டும் என்றார்.
பின்னர் வைகோ பேசுகையில்,
மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையின மக்களுக்குப் போதிய இட ஒதுக்கீடு இல்லை.பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்பட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது என்றார்.
இதே கருத்தை நல்லகண்ணுவும் தெரிவித்தார். விழாவில், வைகோவுக்கு காயிதே மில்லத் நினைவு தங்கப்பதக்கத்தை சுலைமான் சேட் வழங்கினார்.