For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் சிபிஐ விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

வகாசி:

ayalakshmiஜெயலட்சுமியின் பெற்றோர் அழகிரிசாமி, திருவேங்கடத்தம்மாள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.

சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்திற்கு சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. அங்குள்ளஜெயலட்சுமியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அழகிரிசாமி, திருவேங்கடத்தம்மாள்,ஜெயலட்சுமியின் சகோதரர், அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

ஜெயலட்சுமிக்கு எப்போது திருமணம் நடந்தது, எப்போது விவகாரத்து ஆனது என்பது உள்பட பல்வேறுவிவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் கேட்டனர். சிபிஐ அதிகாரிகளின்கேள்விகளுக்கு ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் அளித்த அனைத்து பதில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பின்னர் அதிகாரிகள் காக்கிவாடன்பட்டியிலிருந்து கிளம்பிச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X