For Daily Alerts
Just In
செம்மொழி தமிழ்: கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா
சென்னை:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட முக்கியப் பங்காற்றியமைக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ்மொழி அகாடமிசார்பில் சென்னையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தமிழ்மொழி அகாடமியின் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடைபெறும்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி தலைமை தாங்குகிறார்.
வழக்கறிஞர் ஆர்.காந்தி வரவேற்புரையாற்றுகிறார். எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கவிஞர்கள் சுரதா, வைரமுத்து,பேராசியரா வா.சே. குழந்தைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார். ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் ஜெகத்ரட்சகன் நன்றி உரையாற்றுகிறார்.
Comments
Story first published: Sunday, October 10, 2004, 5:30 [IST]