For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மன நோயாளி" ஆசிரியர்: மாணவர்கள், பெற்றோர் மறியல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மாணவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் காயப்படுத்திய ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று போராட்டம் நடத்தினர்.

சைதாப்பேட்டையில் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் முனியன்என்ற ஆசிரியர் மாணவர்களை மிகக் கடுமையாக அடித்துக் கொடுமைப்படுத்துவதாக தலைமை ஆசிரியடம்மாணவர்கள் பலமுறை புகார் கூறியுள்ளனர்.

ஆனால் இதில் தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் பிளஸ் டூ படிக்கும் சுபாஷ் என்ற மாணவரை முனியன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில்அவரது கையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவன் சுபாஷ் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் முனியனின் போக்கைக் கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் இன்று காலை சாலை மறியலில்ஈடுபட்டனர்.

ஆசிரியர் முனியன் மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மன நோயாளி போல நடந்து கொள்வதாகவும்குமுறிய மாணவர்கள், பள்ளியில் முனியனிடம் அடி வாங்காத மாணவனே கிடையாது என்கின்றனர்.

எந்த வகுப்பு மாணவனாக இருந்தாலும் கூப்பிட்டு அடி வெளுப்பாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X