For Daily Alerts
Just In
மன்மோகன் சிங்குடன் ரணில் சந்திப்பு
டெல்லி:
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசினார்.
அப்போது இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கம், இந்த விவகாரத்தில் இந்தியாதலையிட வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து ரணில் விளக்கினார்.
நேற்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கையும் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகத்தெரிகிறது.
இன்று பிரதமரை செளத் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ரணில் பேசினார். மத்தியில் காங்கிரஸ்தலைமையில் கூட்டணி அரசு அமைந்த பின்னர் ரணில் டெல்லி வந்தது இதுவே முதன்முறையாகும்.
Comments