காசிமேடு மீனவர் பிரச்சினை: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை:
தங்கள் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற காசிமேடு மீனவர்களைகாவல்துறை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
அக் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டீஸல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், வெளி மாநில மீன் விற்பனையை தடை செய்யக் கோரியும்குடும்பத்துடன் காசிமேடு மீனவர்கள் கோட்டையை நோக்கி நேற்று முன்தினம் பேரணி நடத்த முற்பட்டார்கள்.அவர்களை காவல்துறை கைது செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது.
மீனவர் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண அரசு முயலவேண்டும்என்று கூறியுள்ளார்.
ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை புனரமைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குவரதராஜன் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,
இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். மேலும் இத்துறையில் உள்ள ஒரே ஒருபொதுத்துறை நிறுவனம் இதுவாகும். எனவே இந் நிறுவனத்தை மூடும் யோசனையைக் கைவிட்டு அதைபுனரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.