ஜெயலட்சுமி: கால அவகாசம் கேட்க சிபிஐ முடிவு
சென்னை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கின் விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய புகார் குறித்து 2 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 4 நாள்களாக ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்தவிசாரணை மேலும் இரு தினங்கள் நீடிக்கும் என்று தெரிகிறது.
இதுதவிர ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமி தந்த புகார் தொடர்பான வழக்கு விரைவில் சிபிஐ-க்குமாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
எனவே இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த மேலும் காலஅவகாசம் தேவைப்படும் என்று கூறும் சிபிஐ அதிகாரிகள், விசாரணை காலத்தை நீட்டிக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.