கருணாநிதிக்கு மதுரையில் பாராட்டு விழா
மதுரை:
தமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்டதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் இன்று பாராட்டுவிழா நடைபெறுகிறது.
அண்மையில் கருணாநிதிக்கு செம்மொழி அகாடமி என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் முத்தமிழ் சங்கம் என்ற அமைப்பு சார்பில நடைபெறும் இந்த விழாவிற்குபேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகிக்கிறார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், நீதிபதி கோகுல கிருஷ்ணன்,கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து, தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், அறவாணன் உள்ளிட்டோர்கருணாநிதியை வாழ்த்திப் பேசுகின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக கருணாநதி இன்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைவந்தார். ரயில் நிலையத்தில் கருணாநிதிக்கு திமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.