இலங்கை: அடுத்த மாதம் மீண்டும் அமைதி பேச்சு?
கொழும்பு:
அடுத்த மாதம் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைமீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நின்று போன பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க நார்வே கடும் முயற்சிகள் எடுத்துவருகிறது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க புலிகள் கொடுத்த திட்டத்துக்கு பதில் திட்டம் தயாராகஇருப்பதாகவும், அதைப் பரிசீலிக்க விடுதலைப் புலிகள் தயாராக இருந்தால் அது தொடர்பான அறிக்கையைவழங்க இவங்கை அரசு தயாராக உள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா கடந்த வாரம்அறிவித்தார்.
ஆனால் சுயாட்சி அமைப்பு குறித்துப் பேச முன் வந்தால் மட்டுமே இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவோம் எனவிடுதலைப் புலிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இந் நிலையில் 18 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள்உருவாகி வருவதாக இலங்கையின் சண்டே அப்சர்வர் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் சந்திரிகாவிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரதிநிதி, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சிபகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு புலிகளின் பிரதிநிதிகளுடன் ரகசிய ஆலோசனைகளில்இறங்கியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி தான் இது என்றும் அந்தப்பத்திரிக்கை கூறியுள்ளது.
இதற்கிடையே இப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து வரும் நார்வே தூதுக் குழுவும் அடுத்த மாதம் இலங்கைவரவுள்ளது.