For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவி பேட்டி: அனுமதி கோரும் ஜெயலட்சுமி

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

Jayalakshmiதொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது புகார் கூறியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கைதற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் ஜெயலட்சுமி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளுக்கபேட்டி அளிக்க தடை விதிக்கக் கோரி தென் மண்டல காவல்துறை தலைவர் ராஜேந்திரன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஜெயலட்சுமி சார்பில் அவரது வழக்கறிஞர் அழகர்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில், ஜெயலட்சுமி வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, ஜெயலட்சுமிதொடர்பாக தமிழக போலீஸார் எந்த உத்தரவையும் பிறப்பிக்க, தடை செய்ய அதிகாரம் இல்லை.

மேலும், பேச்சுரிமை என்பது அரசியல் சட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளஅடிப்படை உரிமை. எனவே ஜெயலட்சுமி பேட்டி கொடுப்பதை தடை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க 29ம் தேதி வரை அவகாசம் கேட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி பாலசுப்ரமணியம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் 29ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந் நிலையில் ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து 8 வது நாளாக இன்றும் சிபிஐ விசாரணை நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X