For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்கில் ஆயுத ஊழல்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பா.ஜ.க. ஆட்சியில் கார்கில் யுத்தத்தின்போது ஆயுதங்கள் வாங்கியதில் பல கோடி அளவுக்கு முறைகேடுகள்நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கார்கில் யுத்தத்தின்போதும், யுத்தத்திற்குப் பிறகும் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. போரக்ை காரணம்காட்டி பல விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதில் பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக நாட்டின்தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான கம்ப்ரோலர் ஜெனரலும், மத்திய விஜிலென்ஸ் கமிஷனும் குற்றம்சாட்டின.

ஆனால், இது குறித்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசோ, அரசோ எந்த விளக்கமும்அளிக்கவில்லை.

இப்போது மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, இந்த ஆயுத பேர ஊழல் குறித்து விசாரணை நடத்தஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த அபிடவிட் தாக்கல் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போர் விமானங்கள் வாங்க இடைத் தரகர்?

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 10 மிராஜ்-2000 ரகவிமானங்களை இந்தியா வாங்கியதில் இடைத் தரகராக ஒரு நிறுவனம் செயல்பட்டு, கொள்ளை லாபம் அடித்ததாகபுகார் எழுந்துள்ளது.

பனாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷெல் கிருஷ்ணமூர்த்தி மறுத்தார். இதில் இடைத் தரகர்கள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லைஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X