ராமர் கோவில்: அத்வானி மீது வி.பி.சிங் தாக்கு
மும்பை:
எதிர்க் கட்சியாகும்போது மட்டும் தான் பா.ஜ.கவுக்கு ராமர் கோவில் நினைவுக்கு வருகிறது என முன்னாள் பிரதமர்வி.சி.சிங் கூறியுள்ளார்.
மும்பையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியிலும் உத்தரப் பிரதேசத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் ராமர் கோவில் பிரச்சனைக்குதீர்வு காண இவர்கள் முயற்சிக்கவே இல்லை. அதை மறந்தே போயிருந்தனர்.
இப்போது, ஆட்சி போய் மீண்டும் எதிர்க் கட்சி வரிசைக்கு வந்தவுடன் ராமர் கோவில் நினைவுக்கு வந்துவிட்டது.இந்த விவகாரம் தீர, இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருமனதான முடிவெடுக்க வேண்டும் என்று அத்வானிகூறியிருக்கிறார். இதையே தான் நான் பிரதமராக இருந்தபோது அத்வானியிடம் சொன்னேன்.
நான் சொன்னதைக் கேட்காமல் ரத யாத்திரை புறப்பட்டார். இதனால், மசூதி இடிக்கப்பட்டது, பல அப்பாவிகள்உயிரிழந்தார்கள். அந்த அப்பாவிகளின் உயிர்களுக்கக அத்வானி முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
நான் பிரதமராக இருந்த்போது இந்த விவகாரத்துக்கு அமைதியான தீர்வு நெருங்கிக் கொண்டிருநத்து. ஆனால்,நீதிமன்றத்தை வைத்து இந்த விவகாரத்தை தீர்க்க முடியாது என்று சொல்லிவிட்டு ரத யாத்திரையைக் கிளப்பி, தீர்வுஏற்படுவதையே தடுத்தது பாஜ.க. என்றார் வி.பி.சிங்.