For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே தட்கல் டிக்கெட் கட்டணம் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சண்டிகார்:

தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் கட்டணங்களை ரயில்வே நிர்வாகம்உயர்த்தியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு 2 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் முதல் செப்டம்பர் 15ம் வரை பயணிகள்கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு கட்டணமும், மீதி உள்ள 10 மாதங்களில் வேறுவிதமான கட்டணமும்வசூலிக்கப்படும்.

நெரிசல் மிக்க காலத்தில் 2வது ஏ.சி. வகுப்புக்கு ரிசர்வேசன் செய்யவதற்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் 3வது ஏ.சி. வகுப்புக்கான தட்கல் கட்டணம் ரூ.150ல் இருந்துரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.

ஏ.சி. சேர் மற்றும் அனைத்து வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் பயணம் செய்வதற்கான தட்கல் கட்டணம் 50ரூபாயில் இருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

நெரிசல் அல்லாத காலங்களில் 2வது வகுப்பு ஏ.சி. மற்றும் 3வது வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான தட்கல் கட்டணம்ரூ.200 ஆகவும், ஏ.சி.சேர் கார் மற்றும் அனைத்து வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கான கட்டணம் ரூ.75 ஆகவும்இருக்கும்.

இக் கட்டண உயர்வு வருகிற நவம்பர் 14ம் தேதி முதல் அமலுக்கு வரும். இப்போது ரெயில்களில் தட்கல் கோச்என்று தனிப்பெட்டி உள்ளது. இதற்குப் பதிலாக 2வது வகுப்பு ஏ.சி. பெட்டியில் 4 படுக்கைகளும் 3வது வகுப்புஏ.சி. மற்றும் ஏ.சி.சேர் வகுப்பில் தலா 6 படுக்கைகளும், அனைத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 10 சதவீதபடுக்கைகளும் தட்கல் பயணிகளுக்காக ஒதுக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X