20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் கடந்த 1ம் தேதி முதல்விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. மத்திய அரசின் தர நிர்ணயத்தின்படி 17 சதவீதம் வரைஈரப்பதம் உள்ள நெல் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால், குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் 17 சதவீதத்திற்குமேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் வாங்க உத்தரவிடும்படி ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோளினை ஏற்று நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகஉயர்த்தி கொள்முதல் செய்திட மத்திய அரசிற்கு ஜெயலலிதா பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று 20சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அதற்குண்டான பண பிடித்தத்துடன் கொள்முதல் செய்ய மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனைசெய்து பயன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.