For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று கிளம்புகிறார் ராவ்: நாளை வருகிறார் பர்னாலா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா நாளை பதவியேற்கவுள்ளார்.

ராம்மோகன் ராவ், மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநராகநீடிப்பதன் கடைசி நாள் இன்று.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, தற்போதைய ஆந்திர மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை காலைபதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக பர்னாலா இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1989-1990ம் ஆண்டுஆளுநராக இருந்தார். ஒரு ஆண்டு காலம் மட்டுமே பதவி வகித்த அவர் திமுக அரசைக் கலைக்க உதவாத காரணத்தால்அப்போதைய பிரதமர் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, பதவி விலகிச் செல்லும் ஆளுநர் ராம் மோகன் ராவ் இன்று தனது சொந்த ஊரான ஹைதராபாத் புறப்பட்டுச்செல்கிறார்.

பூட்டா சிங் கவர்னரானார்:

இதற்கிடையே முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டா சிங் பிகார் மாநில ஆளுநராகவும், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரானபிரதிபா படேல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X