செக்ஸ் புகார்: நெல்லை நர்ஸிங் கல்லூரி நிர்வாகி கொலை
நெல்லை:
செக்ஸ் புகாருக்கு உள்ளான நர்சிங் பயிற்சி கல்லூரியின் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையில் இந்தியன் காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற நர்ஸிங் பயிற்சி மையம் மற்றும் லேப் டெக்னீசியன்பயிற்சி அளித்து வந்தார் மீரான் மைதின் (50). ஓட்டல் பிஸினசிலும் ஈடுபட்ட வந்த இவர் பெண்கள் விஷயத்தில் சபல கேஸ்என்று பெயர் பெற்றவர்.
4 பெண்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இதில் செல்வி, கீதா ஆகியோர் இவரது பயிற்சி மையத்தில் படிக்க வந்தமாணவிகளாவர்..
இவரது பயிற்சி மைய மாணவிகள் பலரிடமும் இவர் தவறாக நடக்க முயல்வதாக புகார் உண்டு. இந் நிலையில் இவருடன்குடும்பம் நடத்திய பெண்களில் ஒருவரான கீதா என்பவர் குற்றாலத்தில் தமிழ்நாடு பாரா மெடிக்கல் சயின்ஸஸ் என்ற பெயரில்இன்னொரு நர்ஸிங் கல்லூரியை ஆரம்பித்தார்.
அங்கும் மாணவிகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் குற்றாலத்தில்உள்ள இந்த பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோய்விட்டது.
இப்போது திருநெல்வேலி நர்ஸிங் பயிற்சி மையத்தில் 14 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களில் 7 மாணவிகள்நீண்ட விடுப்பில் சென்றுவிட்டனர்.
மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உள்பட இவர் மீது பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந் நிலையில் இந்த பயிற்சி மையத்துக்கு வந்த 4 பேர் மீரான் மைதினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுதப்பியோடுவிட்டனர்.
மீரான் மைதீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரோ ஒருவரது உறவினர்கள் தான் ஆள் வைத்து இவரைக் கொன்றிருக்கவேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீரானால் பாதிக்கப்பட்ட பெண்கள், மீரானுடன் வசித்த பெண்கள்ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பணத் தகராறு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.