For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பர்னாலா அரசியல் செய்ய மாட்டார்: பாஜக நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுர்ஜித் சிங் பர்னாலா அரசியல் நடத்த மாட்டார் நம்புவதாக பாஜகதேசியச்செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஜெயலலிதா அரசைக் கவிழ்க்க பர்னாலாவை ஆளுநராக்கியுள்ளது மத்திய அரசு. ஆனால் ஜனநாயகநெறிமுறைகளை மதிக்கும் பர்னாலா அதற்கு உடன்பட மாட்டார் என நம்புகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்கும் குணம் கொண்டவர் பர்னாலா. ஏற்கனவே 1991ம் ஆண்டு மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய மறுத்து தனது பதவியை இழந்தவர் பர்னாலா.

அதைப் போலேவே இப்போதும் அரசியல் சட்டத்திற்குட்பட்டே அவர் நடந்து கொள்வார் என நம்புகிறோம்.

தனது மனசாட்சிப்படி பர்னாலா நடந்து கொள்ள வேண்டும். பர்னாலா சார்ந்துள்ள அகாலிதளம் பாஜக கூட்டணிக் கட்சியாகஇருக்கிறது.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநராக்க மாட்டோம் என்று கூறிய காங்கிரஸ் இப்போது பர்னாலா, சுஷில் குமார்ஷிண்டே என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து வருவது வியப்புக்குரியது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X