For Daily Alerts
Just In
சிட்டி யூனியன் வங்கி தலைவர் விபத்தில் மரணம்
காஞ்சிபுரம்:
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் நாராயணன் சாலைவிபத்தில் மரணமடைந்தார்.
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கி சிட்டி யூனியன் வங்கி. இதன் தலைவராக இருந்தவர்நாராயணன். கார் ஒன்றில் நாராயணன், தனது மனைவி சாந்தா, உறவினர் கமலாம்மாள் ஆகியோருடன்சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே அவரது கார் சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில்நாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கமலாம்மாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில்இறந்தார்.
படுகாயம் அடைந்த சாந்தாவும், கார் டிரைவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Friday, November 5, 2004, 5:30 [IST]