சட்டம்-ஒழுங்கு: பர்னாலாவிடம் ஜெ. நேரில் விளக்கம்
சென்னை:
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சந்தித்துப் பேசினார். தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைகுறித்து பர்னாலா விளக்கம் கேட்டதால், இச் சந்திப்பு நடந்துள்ளது.
தமிழக புதிய ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு விழா முடிந்து 2 நாட்களாகியுள்ளநிலையில் இன்று ஜெயலலிதா, பர்னாலாவை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி சந்திப்புக்குப் பின்கவர்னர் மாளிகையின் வெளியே நிருபர்களிடம்பேசிய ஜெயலலிதா,
புதிய கவர்னரை மரபுப்படி சந்தித்துப் பேசினேன். தமிழக நிலவரம் (சட்டம், ஒழுங்கு?!), பொருளாதார நிலை குறித்து ஆளுநர்விளக்கம் கேட்டார். அது குறித்து அவரிடம் விளக்கினேன். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம், நிவாரணப் பணிகள் குறித்தும்விளக்கம் தந்தேன். மற்றபடி இச் சந்திப்புக்கு முக்கியதுவம் ஏதும் இல்லை.
என்னுடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோரும்இருந்தனர் என்றார் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் இப்படி இருப்பினும், தமிழக சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்துஜெயலலிதாவிடம் பர்னாலா விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
வீரப்பன் என்களென்டர் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்தும் ஆளுநர் விவரம் கேட்டறிந்ததாக ஆளுநர்மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக ஆளுநரை முதல்வர் சந்தித்தபோதெல்லாம் அமைச்சர்களின் தலை உருட்டப்படுவது வழக்கம் என்பதால், இன்றையசந்திப்பும் கூட அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இது ஆளுநருக்கு விளக்கம் தரும் ஒருசந்திப்புதான் என முதல்வர் தெரிவித்த பிறகே கோட்டையில் அமைதி திரும்பியது.