16ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 16ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், வரும் 16ம் தேதி தமிழகசட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது, வீராணம் தண்ணீர் சென்னையில் வினியோகம் செய்யப்படுவதன் பின்னணியில்ஆளுங்கட்சியினர் இந்த சட்டசபைக் கூட்டத்தை தெம்புடன் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ஜெயலட்சுமி விவகாரத்தை எதிர்க் கட்சியினர் கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதே போல கவர்னர்மாற்ற விவகாரமும் வெடிக்கலாம். இதனால் சூடான விவாதத்துக்கும், அனல் பறக்கும் நிகழ்ச்சிகளுக்கும் குறையே இருக்காது.
தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாமை உரையாற்றச் செய்ய மாநில அரசு முயன்றதும், ஆனால்,சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்று சொல்லி இதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் குளிர்காலக் கூட்டத் தொடரில் கலாம் உரையாற்றுவாரா என்பது குறித்து ஆளுநர் அறிவிப்பில் எந்தத் தகவலும்இல்லை.