For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜானகி எம்ஜிஆரின் வீட்டை ஆக்கிரமித்த தனுஷ்கோடி !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் மகன் சுரேந்திரனுக்குச் சொந்தமான வீட்டைக் காலி செய்யுமாறு காங்கிரஸ்எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரான ஜானகி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் ஜே.சுரேந்திரனுக்கு சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் ஒரு வீடுஉள்ளது. இந்த வீட்டை தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. ஆக்கிரமித்துள்ளதாக சுரேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

இவ் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி ஜானகி எம்.ஜி.ஆரின் மருமகள் வசந்தி தேவி, அந்த வீட்டில்குடியிருக்கும் பொன்னுச்சாமி ஆகியோரும் மனு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் குமார்,

சம்பந்தப்பட்ட வீடு தனக்குத்தான் சொந்தம் என்று நிரூபிக்கும் பொருட்டு வசந்தி தேவி தாக்கல் செய்த உயில் பத்திரம்போலியானது என்பது தெரிய வருகிறது.

மேலும், வீட்டில் குடியிருப்பதாக கூறும் பொன்னுச்சாமியும் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.தனுஷ்கோடி ஆதித்தன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களும் போதுமானதாக இல்லை.

எனவே மனுதாரர் சுரேந்திரனுக்கே இந்த வீடு சொந்தமானது என்று தீர்ப்பளிக்கிறேன். அந்த வீட்டில் குடியிருப்போர் உடனடியாககாலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன் என்று அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தார் நீதிபதி அசோக் குமார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி வீட்டைக் கையகப்படுத்த வழக்கறிஞர்களுடன் சுரேந்திரன் சென்றபோது வீடு பூட்டியிருந்தது.இதைத் தொடர்ந்து சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தை சுரேந்திரன் நாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி முகம்மது பரூக், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுரேந்திரனுக்கு அந்த வீடு சொந்தமானது. எனவே,போலீஸார் தற்போது அந்த வீட்டின் பூட்டை உடைத்து அதில் குடியிருப்பவர்களை வெளியேற்றி மனுதாரரிடம் வீட்டைஒப்படைக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.

வீட்டை ஆக்கிரமித்த தனுஷ்கோடி ஆதித்தன், அதில் பொன்னுசாமியை தங்க வைத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X