For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வக்கீல்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும், அரசுவழக்கறிஞர்களையும் கடுமையாக தாக்கியதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கண்டனம்தெரிவித்துள்ளார்.

செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலுக்கு தலைமை தாங்கிய இந்து மக்கள் கட்சித் தலைவர் விநாயகர் முரளியைக் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதரீதியான மோதல்களுக்கு உயர் நீதிமன்றம் இடமல்ல. இங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடத்திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சேர்ந்த ராம ரவிக்குமார், மனோகர், முருகன், செல்வக்குமார்உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் கண்ணதாசன், செந்தில்குமார், சாமுவேல் ஆகிய வழக்கறிஞர்கள்காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X