கங்குலிக்கு தடை: மேல்முறையீடு செய்ய பிசிசிஐ முடிவு
கொல்கத்தா:
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கேப்டன் செளவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த பிசிசிஐ பவள விழா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்டமூன்றரை மணி நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு இந்திய அணி பந்து வீசியது. கடந்த ஒரு ஆண்டில் இந்தியாஇரண்டாவது முறையாக, இந்தத் தவறைச் செய்கிறது.
இது குறித்து ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், கங்குலிக்கு இரண்டு டெஸ்ட்போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து ஐ.சி.சியில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் ரன்பீர்சிங் மகேந்திரா தெரிவித்தார்.
பதானுக்கு அபராதம்:
இதுதவிர, கொல்கத்தா போட்டியில் மைதானத்தில் சண்டையிட்ட இந்திய வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் துணைக் கேப்டன்யூசப் யுகானா இருவருக்கும் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைக் குழு அபராதம் விதித்துள்ளது.
பதானுக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதமும், யுகானாவுக்கு 75 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.