கேஸ் விலை குறையாது: அய்யர் திட்டவட்டம்
டெல்லி:
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படமாட்டாது என்று மத்தியபெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
டேராடூனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட பெட்ரோலிய சோதனைக் கூடத்தைமணிசங்கர் திறந்து வைத்தார். அப்போது மாணவர்களிடம் அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வது பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனைசமாளிக்க ஆசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதனால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் வலுவிருக்கும். உள்நாட்டில் எண்ணெய்வளம் இருக்கும் இடங்களை கூடுதலாக கண்டுபிடித்து உற்பத்தி செய்ய முழு முயற்சி எடுக்கப்படும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் ரூ. 5 உயர்த்துவது என்ற மத்தியஅரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அய்யர்.