கங்குலியிடம் இன்று ஐ.சி.சி. விசாரணை
கான்பூர்:
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை தொடர்பாக இந்தியக் கேப்டன் செளரவ் கங்குலியிடம் ஐசிசிஇன்று விசாரணை நடத்துகிறது.
ஒரு நாள் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக கங்குலிக்கு இரண்டுடெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து தடையைஐசிசி நிறுத்தி வைத்தது.
பின்பு கங்குலி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இந் நிலையில், கங்குலியிடம் ஐசிசி மேல்முறையீடு ஆணையர் டெலிகான்ஃபிரன்ஸ் முறையில் இன்று விசாரணை நடத்தவுள்ளார்.அதனையடுத்தே அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது தெரிய வரும்.
இதனை பிசிசிஐ செயலாளர் எஸ்.கே.நாயர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை அடுத்து வங்காளதேசத்துடன் அடுத்த மாதம் 9 முதல் 27-ம் தேதி வரை 2 டெஸ்ட், 3ஒருதின ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. இதற்கான இந்தியா அணி, தென் ஆப்பிரிக்காவுடனான கொல்கத்தா டெஸ்ட்போட்டியல் அறிவிக்கப்படும்.