For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை 2 நீதிமன்றங்களில் ஜெயேந்திரர் ஆஜர்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Appu and Jayendrar

சங்கராச்சாரியாருக்கு மலர்களால் பாதபூஜை நடத்தும் தாதா அப்பு
சங்கர மட பக்தர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும், சங்கரராமன் கொலைவழக்கில் காவல் நீட்டிப்புக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்திலும் நாளை ஜெயேந்திரர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இரு நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார்.

சங்கரராமன் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்து வரும் ஜெயேந்திரரின் காவல் நாளையுடன் முடிவடைகிறது.

இதையடுத்து அவர் நாளை காலை காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன்ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதற்கிடையே, சங்கர மட பக்தர் ராதாகிருஷ்ணன் என்பவரின் குடும்பத்தைத் தாக்கிய வழக்கிலும் ஜெயேந்திரர்சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

அப்போது காவல்துறை தரப்பில் பேசிய வழக்கறிஞர், ஜெயேந்திரர் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்படவுள்ளார். அன்றைய தினமே அவரை இங்கும்ஆஜர்படுத்துகிறோம் என்றார்.

இதையடுத்து விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும்சங்கராச்சாரியார் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் ஜெயேந்திரர் ஆஜர்படுத்ப்படவுள்ளதால் நாளைய தினம் மிகப் பரபரப்பானதானஇருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X