For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹேபியஸ் கார்பஸ்: தப்பித்தார் குமரி வக்கீல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயேந்திரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய ஹேபியஸ் கார்பஸ் (ஆள்கொணர்வு)மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த வில்பிரட் பிரகாஷ் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ஜெயேந்திரர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உயர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். அவரை விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிரகாஷுக்கு கடும் கண்டனம்தெரிவித்தது. எந்த அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள் என்று பிரகாஷை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

வழக்கு செலவு முழுவதையும் அபராதத் தொகையாக வசூலிக்கப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர். இந் நிலையில்இன்றைக்கு அந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் மனு மீதான விசாரணையை நீதிபதிகள்மேற்கொண்டனர்.

அப்போது வில்பிரட் பிரகாஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல்செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும், அபராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என்றும் வில்பிரட் பிரகாஷ்கோரியிருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், அசோக் குமார் ஆகியோர் பிரகாஷின் மன்னிப்பை ஏற்பதாகதெரிவித்தனர். பின்னர், பிரகாஷ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அதைத் தள்ளுபடி செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X