ஜெயேந்திரர்: சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி
டெல்லி:
ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், இதில் சிபிஐ விசாரணை கோரியும் முன்னாள்பாஜக எம்.பி. தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் பாஜக எம்.பி. சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் ஒருமனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி லகோத்தி தலைமையிலான பெஞ்ச் அதைத் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டது.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கூட தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு தாக்கல் செய்திருந்தால், வழக்குவிசாரணையின் தன்மை குறித்து நீதிமன்றம் ஒரு கருத்துக்கு வர ஏதுவாக இருந்திருக்கும்.
உண்மையை அறிய வேறு எந்த ஆவணங்களோ, முயற்சிகளோ மனுதாரரால் செய்யப்படவில்லை. மேலும் மனுதாரர் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரோ கிடையாது.
மேற்கூறியவைகளிலிருந்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட எந்த சிறப்பு சட்ட அதிகாரமும் கிடையாது என்பதுதெளிவாகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி கோர்ட் ஹாலில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.