புதிதாக 2 விசாரணை குழுக்கள் அமைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் புதிதாக 2 போலீஸ் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதிலும், கொலைச் சதியில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளதுஎன்பதை அறிவதிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விடவும்காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சங்கரராமனைக் கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணிகளை ஆராயவும், அதற்கான பின்னணி குறித்துஅறியவும் புதிதாக 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குழு சென்னையிலும், இன்னொரு குழுகடலூரிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இரு போலீஸ் குழுக்களும் தற்போது காஞ்சிபுரத்தில் முகாமிட்டு விசாரணையில் இறங்கியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்போர் குறித்து தெரிவிக்க காவல்துறை தரப்பு மறுத்து விட்டது.