For Daily Alerts
Just In
சதுர்வேதி லாக்கரில் நகைகள் குவியல்!
சென்னை:
பாலியல் முறைகேட்டில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த சதுர்வேதி சாமியாரின் வங்கி லாக்கரிலிருந்து வைரம் மற்றும் தங்க நகைக்குவியலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
அவரை திடீரென தி.நகரில் உள்ள கனரா வங்கிக் கிளைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு சதுர்வேதியின் பெயரில் உள்ளலாக்கரை போலீஸார் திறந்து சோதனையிட்டனர்.
அப்போது அதில் ஏகப்பட்ட வைரங்கள் இருந்தன. கூடவே தங்க நகைகளும். மொத்தமாக 1,270 கிராம் எடையளவுக்கு நகைகள்இருந்தன. இவற்றைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவையெல்லாம் பக்தர்கள் தந்தது என்று போலீசாரிடம் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
Story first published: Wednesday, December 1, 2004, 5:30 [IST]