அப்புவுடன் தொடர்பு: நடிகை வீட்டில் சோதனை
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் அப்புவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிரபல தமிழ் நடிகை வீட்டில் தமிழகபோலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்படும் அப்புவை போலீஸார் கைது செய்து, டெல்லியில் விசாரித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது.
இந் நிலையில் ஹைதராபாத்தில் குடியேறியுள்ள பிரபல தமிழ் நடிகை வீட்டில் 2 மணி நேரம் தமிழக போலீசார் சோதனைநடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நடிகை முதலில் தமிழ்ப் படங்களில் அறிமுகமாகி பின்பு தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகையாகவிளங்கியவர், ஒரு சில தமிழ்ப்படங்களில் வில்லி போல் நடித்து தூள் கிளப்பினார்.
இப்போது திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் இருக்கிறார். இவருக்கும் அப்புவுக்கும் இருந்த தொடர்பு குறித்துபோலீஸாருக்குத் தெரியவந்தது.
இந் நிலையில் அப்புவை கைது செய்வதற்கு முன்பு, இந்த நடிகையின் வீட்டில் போலீஸார் 2 மணி நேரம் சோதனை செய்ததாகக்கூறப்படுகிறது.