For Daily Alerts
Just In
டாக்சி உரிமையாளர்களிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் அடிக்கடி சென்னைக்கு வாடகைக் காரில் போய் வந்தது தொடர்பாக காஞ்சிபுரம் வாடகை கார்களின்உரிமையாளர்கள், டிரைவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
காமாட்சியம்மன் கோவிலில் நடக்கும் ஊழல், சங்கர மடத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து சென்னையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் வேறு சிலரைச் சந்திக்கவும் சங்கரராமன் பலமுறை சென்னை வந்துசென்றுள்ளார்.
சென்னையில் சங்கரராமன் யார் யாரைச் சந்தித்தார், எங்கெங்கு சென்றார் போன்ற விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
அவர் பெரும்பாலும் உபயோகித்த வாடகைக் கார்களின் உரிமையாளர்கள்-கம்-டிரைவர்களான தாமோதரன், முரளிஆகியோரிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
Story first published: Saturday, December 4, 2004, 5:30 [IST]